Breaking News

கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் இலவச உணவுடன் தங்கும் விடுதிக்கு விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்...

அட்மின் மீடியா
0

கல்லூரி மாணவ, மாணவிகள் அரசின் இலவச தங்கும் விடுதிக்கு விண்ணப்பிக்கலாம்! முழு விவரம்...



இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில்....

சென்னையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்/ மிகப்பிற்படுத்தப்பட்டோர்/ சீர்மரபினர்/ சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் மற்றும் மாணவியர்களுக்காக 16 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 5 மாணவியர்கள் விடுதியாக செயல்பட்டு வருகின்றன.

சென்னையில் செயல்பட்டு வரும் கல்லூரி/ பாலிடெக்னிக்/ ஐடிஐ/பட்டப்படிப்பு/ பட்ட மேற்படிப்பு படிப்புகளில் பயிலும் மாணவ/மாணவியர் சேரத் தகுதியுடையவர்கள் . பிவ/பிபிவ/சீம விடுதிகளில் அனைத்து வகுப்பை சார்ந்த மாணவ /மாணவிகளும் விகிதாச்சார அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவர். 

இங்கு சேர்க்கப்படும் அனைத்து விடுதி மாணவ/மாணவியர்களுக்கும் உணவும், தங்கும் வசதியும் இலவசமாக அளிக்கப்படும்.

இந்த சலுகையை பெற விரும்புபவர்கள் பெற்றோர்/பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.2,00,000/-க்கு மிகாமல் வேண்டும். 

வசிக்கும் இடத்திலிருந்து கல்வி நிலையம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும். விருப்பமும், தகுதியும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இவர்கள் விடுதி காப்பாளரிடமிருந்து கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

கல்லூரி மாணவிகள்கல்லூரிகளில் படிக்கும் மாணவ மாணவியர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 31.07.2022 க்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் சாதி மற்றும் பெற்றோரது ஆண்டு வருமானம் குறித்த சான்றிதழ்களை அளிக்கலாம் அல்லது விடுதியில் சேரும் பொழுதும் இச்சான்றிதழ்களை அளிக்கலாம்.

ஒவ்வொரு விடுதியிலும் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகளுக்காக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதே போல் குழந்தைத் தொழிலாளர்களை எக்காலத்திலும் எந்த நேரத்திலும் எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் சேர்த்துக்கொள்ளப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு:-

 https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2022/07/2022070760.pdf







Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback