Breaking News

ரூ.5000 செலவில் கிராமசபை கூட்டங்கள் நடத்தலாம் – தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

கிராம ஊராட்சியின் அனுமதியின்படி கிராம ஊராட்சி நிதியிலிருந்து, அதிகபட்சமாக ரூ.1000 செலவு செய்ய கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது அதன்படி...


மேலும் 2022ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று ஆணை வெளியிடப்பட்டது.

ஜனவரி 26, 

மே 1 , 

ஆகஸ்ட் 15, 

அக்டோபர் 2 ,

மார்ச் 22, 

நவம்பர் 1 

ஆகிய தேதிகளில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்படும். 

இந்நிலையில் கிராம சபை கூட்டத்திற்கான செலவின வரம்பினை ரூ. 1000லிருந்து ரூ. 5ஆயிரமாக ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

இது தொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அமுதா பிறப்பித்துள்ள உத்தரவில், 

கிராம சபை நடத்த கிராம ஊராட்சி நிதியில் இருந்து அதிகபட்சமாக ரூ.1000 செலவு செய்ய கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. தற்போது 14 ஆண்டுகள் கடந்த நிலையில் இந்தத் தொகை போதுமானதாக இல்லை என்பதால், அதை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி கிராம சபை, சிறப்பு கிராம சபை நடக்கும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சி பொது நிதியிலிருந்து மேற்கொள்ள உரிய அரசாணை வழங்குமாறு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் அரசை கேட்டுக் கொண்டுள்ளளார்.இதை அரசு கவனமாக பரிசீலனை செய்ததது. 


 

அதன் அடிப்படையில் கிராம சபை கூட்டங்கள் நடத்துவதற்கான செலவினம் ரூ.ஆயிரத்தில் இருந்து ரூ.5 ஆயிரமாக உயர்த்தி அரசு ஆணையிடுகிறது. மேலும் கிராம சபை, சிறப்பு கிராம சபை நடக்கும் நாட்களில் ஊராட்சி மன்ற ஒப்புதலுடன் ஊராட்சி பொது நிதியில் இருந்து செலவினத்தை மேற்கொள்ள ஊராட்சி தலைவர்களுக்கு அனுமதி வழங்கி ஆணையிடப்படுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback