31-ந்தேதிக்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால் ரூ.1,000 முதல் 5000 அபராதம் விதிக்கப்படும்
அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது.ஆகஸ்டு 1 முதல் வரி செலுத்துவோருக்கு ரூ.1,000 முதல் 5000 அபராதம் விதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது
2021-2022-ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்ச வரம்பை தாண்டும் அனைவரும், வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
அபராதமின்றி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், வருகிற 31-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இது தொடர்பாக, வரி செலுத்துவோருக்கு இமெயில் மூலமும் மெசஜ் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது.அதற்கு பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர், ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். எனவும் ரூ.5 லட்சதத்துக்கு மேல் வருவாய் ஈட்டுவோர், வருகிற டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் எனவும் இதுதொடர்பாக வரி செலுத்துவோருக்கு குறுந்தகவல் மற்றும் இ-மெயில் வாயிலாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது எனவே ஜூலை 31 ம் தேதிக்குக்குள் வரியை செலுத்திவிடுங்கள்
Tags: இந்திய செய்திகள்