கனமழை இன்று 13.07.2022 விடுமுறை அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நீலகிரியில் கனமழையால் கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.இதனால், தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நான்கு தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி,நீலகிரியில் உதகை,பந்தலூர்,கூடலூர்,குந்தா ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Tags: தமிழக செய்திகள்