Breaking News

ஆகஸ்ட்10 ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0
சேலம், கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அறிவித்துள்ளார்



சேலம் மாவட்டம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் அறிவித்துள்ளார். 

சேலத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் ஆடிதிருவிழா இந்த வருடம் 26-ம் தேதி (ஆடி மாதம் 10-ம் தேதி) தொடங்கி அடுத்த மாதம் 16-ம் தேதி வரை நடக்கிறது. 

திருவிழா முதல் நாளான 26-ம் தேதி இரவு 8 மணிக்கு பூச்சாட்டுதலுடன் விழா தொடங்குகிறது. இதனைத்தொடர்ந்து, அடுத்த மாதம் 8-ம் தேதி இரவு 8 மணிக்கு சக்தி அழைப்பும், 10 -ம் தேதி முதல் 11-ம் தேதி வரை பொங்கல், மாவிளக்கு, பிரார்த்தனை செய்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இந்த நிலையில், சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி ஆகஸ்ட் 10ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback