குருப் 1 தேர்வு துணை கலெக்டர், டிஎஸ்பி ஆக வேண்டுமா? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் முழு விவரம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.குரூப் 1 தேர்வுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
அதன்படி, துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர், ஊரகவளர்சித்துறை துணை இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 6 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களை நிரப்புவதற்காக குரூப் 1 முதல்நிலைத் தேர்வு அக்.30ல் நடைபெற உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப் 1 தேர்வு எழுத இன்று முதல் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான http://tnpsc.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க:-
https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==
மேலும் விவரங்களுக்கு:-
https://tnpsc.gov.in/Document/english/Group%20-I%20Notification_English.pdf
Tags: வேலைவாய்ப்பு