Breaking News

BREAKING NEWS அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை

அட்மின் மீடியா
0

அதிமுக பொதுக்குழுவை ஒத்திவைக்க ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை


இந்நிலையில் 23ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை தள்ளிவைக்க எடப்பாடி பழனிச்சாமிக்கு, ஓ.பன்னீர்செல்வம், தரப்பு கடிதம் அனுப்பியுள்ளது. அதில், 

23-06-2022 அன்று நடைபெறவுள்ள கழகப் பொதுக் குழு மற்றும் செயற் குழுக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களை அழைப்பது குறித்து விவாதித்து முடிவு எடுக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையகமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில் 14-06-2022 அன்று மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

பொதுக் குழு நடைபெற உள்ள மண்டபத்தில் நிலவும் இடப்பற்றாக்குறை காரணமாக சிறப்பு அழைப்பாளாகளை அழைக்க வேண்டாம் என்ற தகவலை தாங்கள் தெரிவித்தீர்கள். கூட்டம் அழைக்கப்பட்டதன் பொருள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டு முடிந்த பிறகு, முன்னறில் ஒற்றைத் தலைமை, இரட்டைத் தலைமை குறித்து கருத்துகள் முடிந்த பிறகு,முன்னறிவிப்பு இல்லாமல்,பொதுவாக, கழக பிற அணி நிர்வாகிகள், முன்னாள் அணி நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், மன்ற உறுப்பினர்கள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாவட்டக் கழகச் செயலாளர்கள், முன்னாள் வாரியத் தலையாகம் செய்து உழைத்த மூத்த முன்னோடிகள் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக பொதுக் குழுவிற்கு அழைப்பது நமது கழதைதா ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்படும் நடைமுறை. இந்த நடைமுறை 23-06-2022 அன்று நடைபெறவுள்ள பொதுக் குழுவில் பின்பற்றப்படாது என்ற தகவலை அறிந்த கழக உடன்பிறப்புகள் எங்களைத் தொலைபேசி வாயிலாகவும், நேரிலும் சந்தித்து சிறப்பு அழைப்பாளர்களாக தங்களையும் அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுத்து வருகிறார்கள். 

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அதே மண்டபத்தில் பலமுறை கழகத்தின் பொதுக் குழுவை நடத்தியபோதெல்லாம் சிறப்பு அழைப்பாளர்கள் அழைக்கப்பட்டனர். இப்போது அதே மண்டபத்தில் இடமில்லை என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை என்று தங்களது ஆதங்கத்தை தெரியப்படுத்துகின்றனர்.

இதுமட்டுமல்லாமல், முன்னறிவிப்பு இல்லாமல், ஒற்றைத் தலைமை மற்றும் இரட்டைத் தலைமை குறித்து 14-06-2022 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சில மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் சில கழக நிர்வாகிகள், கழக சட்ட விதிகளை உணராமலும், அறியாமலும் கருத்து தெரிவித்துள்ளனர். 

அத்தகைய கருத்தால் கழகத் தொண்டர்கள் கொதித்துப் போயுள்ளனர். கழக நிர்வாகிகள் மத்தியிலும், கழகத் தொண்டர்கள் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. அத்தகைய கருத்தால் கட்சியில் குழப்பமும் கட்சியின் நற்பெயருக்கு களங்கமும் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இதனையடுத்து, கழகத் தொண்டர்கள் அனைவரும் அமைதி காக்குமாறு டிவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள சூழ்நிலையில் அமைதி காப்பது அவசியம். விடுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள அசாதாரண பொதுக் குழுக் கூட்டம் தொடர்பான பொருள் (Agenda) = தொடர்பான பொருள் (Agenda) அடங்கிய விவரம் கிடைக்கப் பெறவில்லை என கழக செயற் குழு மற்றும் பொதுக்க உறுப்பினர்கள், பல மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கது நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர். கூட்டத்திற்கான பொருள் (Agenia) செய்து கூட்டத்தை நடத்துவது அவசியமாகிறது என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

எனவே, மேற்காணும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, கழகத்தின் நலன் கருதி, 23-06-2022 அன்று நடைபெறவுள்ள செயற் குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தினை தற்போதைக்கு தள்ளி வைக்கலாம் என்றும், அடுத்தக் கூட்டத்திற்கான இடம், நாள் மற்றும் நேரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் மற்றும் கழக இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய நாம் இருவரும் கலந்தாலோசித்து பின்னர் முடிவு செய்யலாம் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று குறிப்பிட்டு ஓபிஎஸ் , வைத்திலிங்கம் இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

 

 




 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback