மின்சார வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும் - மின்சார வாரியம் உத்தரவு
தமிழக மின்சார வாரிய ஊழியர்கள் கட்டாயம் சீருடை விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக,வெளியிடப்பட்டுள்ள உத்தரவில்
பெண் ஊழியர்கள்:-
மின்சார வாரிய பணியின் போது பெண் ஊழியர்கள் சேலை,சல்வார்,சுடிதாருடன் துப்பட்டா அணிந்து பணியாற்றலாம்.
ஆண் ஊழியர்கள்
மின்சார வாரிய பணியின் போது ஆண் ஊழியர்கள் பார்மல் பேண்ட்,வேட்டி மற்றும் இந்திய கலாச்சார உடைகளை அணியலாம்.
பணியின்போது ஊழியர்கள் கேசுவல் உடைகளை அணியக்கூடாது.இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது
மேலும் அலுவலகத்தில் கண்ணியம் ஒழுக்கம் ஆகியவற்றை பேணும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்