அதிகரிக்கும் கொரோனா பரவல் - கர்நாடகாவில் முககவசம் கட்டாயம் என அறிவிப்பு
பள்ளி, கல்லூரிகள் மற்றும் தனியார் நிறுவனங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கதவுகள் மூடிய நிலையில் இயங்கும் வணிக வளாகங்கள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள், விடுதிகள், தொழில் நிறுவனங்களில் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சொந்த வாகனங்கள் மற்றும் பஸ்-ரெயில்களில் பயணிக்கும்போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும்.
கொரோனா பரவல் அதிகமுள்ள இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். சளி-காய்ச்சல் பாதிப்புக்கு ஆளானவர்கள் மற்றும் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
பரிசோதனை முடிவு வரும் வரை அவர்கள் வீடுகளிலேயே தனிமையில் இருக்க வேண்டும். தகுதியான அனைவரும் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இந்த கட்டுப்பாடுகளை பெங்களூரு மாநகராட்சி உள்பட அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்