மாணவர்களே மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்..
தமிழகத்தில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம் எனவும் நாளை (22-ம் தேதி) முதல் வரும் 29-ம் தேதி வரை மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று வெளியிட்டார்.இதைத் தொடர்ந்து, 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் ஜூன் 24 முதல் வழங்கப்படும். 12-ம் வகுப்பு துணைத் தேர்வு ஜூலை 27-ம் தேதி தொடங்கும். 10-ம் வகுப்பு துணைத் தேர்வு ஆகஸ்ட் 2-ம் தேதி தொடங்கும் எனவும் அறிவிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 24-ம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அவரவர்பள்ளிகள் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் மேலும் www.dge.tn.nic.in இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டது
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்