ஆதாரம் இல்லாத, தவறான தகவல் அளித்து விளம்பரம் வந்தால் 50 லட்சம் வரை அபராதம்...மத்திய அரசு
மக்களை திசை திரும்பும் விளம்பரங்கள் மற்றும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதை தடை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
அதில்
ஆதாரம் இல்லாத உரிமை கோரல்கள்,
மிகைப்படுத்தப்பட்ட வாக்குறுதிகளை அளித்தல்,
தவறான தகவல்களை அளித்தல்
போன்றவற்றால் நுகர்வோர் ஏமாற்றப்படாமல் இருப்பதை இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உறுதி செய்கின்றன.
மேலும் உற்பத்தியாளர்கள், விளம்பரம் செய்வோர் தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிப்போர் ஆகியோருக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க முடியும். தொடர்ந்து தவறு செய்வோருக்கு ரூ.50 லட்சம் வரையும் அபராதம் விதிக்கப்படலாம். தவறாக வழிகாட்டும் விளம்பரங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் நிறுவனம் இத்தகைய விளம்பர தயாரிப்புக்கும், ஒப்புதல் அளிப்பதற்கும் முதலில் ஓராண்டு வரையும் தொடர்ந்து விதிமுறைகளை மீறினால் 3 ஆண்டு வரையும் ஆணையத்தால் தடை விதிக்க முடியும்.” என்று தெரிவித்துள்ளது
Tags: இந்திய செய்திகள்