சத்தீஸ்கர் மாநிலம் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 4 நாட்கள் (106 மணி நேரம்) கழித்து உயிருடன் மீட்பு! வீடியோ
சத்தீஸ்கர் மாநிலம் - ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 106 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் உயிருடன் மீட்பு!
சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி-ஷம்பா மாவட்டம், பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ராகுல், கடந்த 10 ஆம் தேதி தனது வீட்டின் பின்புறம் உள்ள 80 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை தவறி விழுந்தான்.
கிணற்றில் சுமாா் 60 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்ட அவனை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, ராணுவம், காவல் துறை, மாவட்ட நிா்வாக அதிகாரிகள் என 500-க்கும் மேற்பட்டவா்கள் ஈடுபட்டிருந்தனா்.
குறிப்பாக ஆழ்துளை கிணற்றின் அருகே மிகப்பெரிய சுரங்கம் தோண்டப்பட்டதுஆழ்துளை கிணற்றுக்குள் குழாய் மூலம் குழாய் வழியாக ஆக்சிஜன் அனுப்பப்பட்டது
தீவிரமாக நடந்த இந்த மீட்பு பணி 4 நாட்களுக்கு மேல் தொடர்ந்தது.இந்த நிலையில் 100 மணி நேரத்துக்கும் மேலான மீட்பு முயற்சிக்கு பின் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான்.
உடனடியாக பிலாஸ்பூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அவனது உடல்நிலை சீராக இருப்பதாக பிலாஸ்பூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்தாா்.
இது குறித்து சத்தீஸ்கர் முதல் மந்திரி பூபேஷ் பாகல் தனது டுவிட்டர் பதிவில் ;அனைவரின் பிரார்த்தனையாலும், மீட்புக் குழுவினரின் இடைவிடாத அர்ப்பணிப்பு முயற்சியாலும், ராகுல் சாஹு பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.அவர் விரைவில் பூரண குணமடைய வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.என தெரிவித்துள்ளார் .
வீடியோ பார்க்க:-
Tags: இந்திய செய்திகள்