Breaking News

3 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் கொரானா உயிரிழப்பு!

அட்மின் மீடியா
0

தஞ்சாவூரில் 18 வயது இளம் பெண் கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கொரோனா பாதிப்பு


தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 476 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், இதுவரை தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 58 ஆயிரத்து 445 ஆக அதிகரித்துள்ளது.அதிகபட்சமாக சென்னையில் 221 பேருக்கும், செங்கல்பட்டில் 95 பேருக்கும், கோவையில் 26 பேருக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 18 ஆயிரத்து 481 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களாக கொரோனாவால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை.இந்நிலையில் நேற்று கொரோனா தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

தஞ்சாவூரில் ஒரு பெண்ணுக்கு காய்ச்சல் அறிகுறிகளுடன் பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இதன் காரணமாக அப்பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழப்புக்கான மருத்துவ காரணங்கள் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback