Breaking News

அக்னிபத் திட்டத்தில் பணிக்கான வயது வரம்பு 21ல் இருந்து 23 ஆக அதிகரிப்பு - பாதுகாப்புத்துறை அறிவிப்பு

அட்மின் மீடியா
0

ராணுவத்தில் புதிதாக சேர விரும்புவோருக்கான மிக முக்கியமான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு அக்னிபத் என்று பெயரிடப்பட்டுள்ளது.



அக்னிபத் திட்டத்தில் தேர்வாகும் இளைஞர்கள் அக்னி வீரர்கள் என அழைக்கப்படுவார்கள். இந்திய ராணுவத்தில் இது ஒரு புதுவிதமான முயற்சி. இந்த முறையில் தேர்வாகும் வீரர்கள் 4 ஆண்டுகள் பணியில் இருப்பார்கள். மாதம் 30 ஆயிரம் முதல் 40,000 வரை சம்பளம் வழங்கப்படும்இந்தத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீகாரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.இந்நிலையில், அக்னிபத் திட்டத்தில் பணிக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 23 ஆக அதிகரித்து பாதுகாப்புத்துறை உத்தரவிட்டது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback