நாடுமுழுவதும் ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்கு தடை
அட்மின் மீடியா
0
நாடுமுழுவதும் ஜூலை 1 முதல் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி மற்றும் பயன்பாட்டுக்கு தடை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பு
ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் உற்பத்தி ஜூலை 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் தடை செய்யப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஒரு முறை பயன்படுத்தக்கூடிய குறைவான பயன்பாடு கொண்ட அதிக குப்பையை ஏற்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை, பயன்பாடு ஆகிய அனைத்திற்குமான தடை நாடு முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் முதல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்