ரோம் தேவாலயத்தில் ஒலித்த தமிழ்த்தாய் வாழ்த்து வைரல் வீடியோ
தமிழ்நாட்டின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் கலாச்சார நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
தமிழகத்தின் மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் விழா ரோம் நகரில் நடைபெறவுள்ளது. முன்னதாக செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் நேற்று நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ் , செஞ்சி மஸ்தான், சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் கலந்துகொண்டனர். அருட்சகோதரிகளின் தமிழ் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது.
இத்தாலியில் எதிரொலித்த தமிழின் பெருமை.. 18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்நாட்டை சேர்ந்த தேவசகாயம் பிள்ளை அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி தமிழைப் பெருமைப்படுத்தினர்” என்று அமைச்சர் தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
வீடியோ பார்க்க:-
https://twitter.com/TNITMinister/status/1525547469001867266
Tags: தமிழக செய்திகள் வைரல் வீடியோ