தஞ்சை அருகே ஷவர்மா சாப்பிட்ட கல்லூரி மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் கன்னியாகுமரியை சேர்ந்த பிரவீன், புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன், தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருகின்றனர்.
நேற்று இரவு மூன்று பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலையில் ஒரு பெட்ரோல் பங்க் அருகே உள்ள பாஸ்ட் புட் ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு விட்டு விடுதிக்கு திரும்பினர் அப்போது திடீரென 3 பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
இதையடுத்து 3 மாணவர்களும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.அங்கு இரவு முழுவதும் மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு மாணவர்கள் 3, பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
இந்நிலையில் சம்பந்தப்பட்ட கடைகளை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பின்னர் மாவட்ட உணவு பொருள் அதிகாரி கடைக்கு வந்து ஆய்வு செய்தார். பின்னர் ஆய்வில் கடைக்கு உரிய அனுமதி இல்லை என்பது தெரியவந்தது. இதனையடுத்து கடை தற்காலிகமாக மூடப்பட்டது.