மீண்டும் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்! முழு விவரம்..
ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்துகிறது ஏர்டெல்!
டெலிகாம் நிறுவனங்களான வோடபோன் ஐடியா, ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கடந்த ஆண்டு, தங்களது ப்ரீபெய்ட் திட்டங்களுக்கான விலையை அதிரடியாக உயர்த்தின. இதனால் வாடிக்கையாளர்கள் மிகுந்த அளவில் பாதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக கோபால் விட்டல், "5ஜி ரிவர்ஸ் விலைகளுக்கான டிராயின் பரிந்துரையில் தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மகிழ்ச்சியடையவில்லை. இதனால்
இந்த ஆண்டில் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளோம். ஏர்டெல் ப்ரீபெய்ட் கட்டணங்கள் இன்னும் குறைவாகவே உள்ளது. ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சராசரியாக ரூ.200 வரை வசூலிக்க வேண்டும். இந்த கட்டண உயர்வை வாடிக்கையாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Tags: தொழில்நுட்பம்