வங்ககடலில் உருவானது அசானி புயல் – வானிலை ஆய்வு மையம்!
வங்கக்கடலில் இன்று புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில்,தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதாகவும்,அதற்கு ‘அசானி’ என பெயர் வைத்துள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த புயல் அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக வலுப்பெறும் என்றும்,பின்னர் ஆந்திரா -ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வருகிற 10ஆம் தேதி ஆந்திரா - ஒடிசா இடையே கரையை கடக்கும் நிலையில் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தற்போது 16 கிமீ வேகத்தில் நகரும் புயல் தற்போது விசாகப்பட்டினத்தில் இருந்து 970 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்