ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தொந்தரவு தந்தால் டிசியில் குறிப்பிட்டு நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், சான்றிதழ்களில் காரணம் குறிப்பிட்டு என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்
சட்டப்பேரவையில் இன்றைய விவாதத்தின் போது அமைச்சர் அன்பில் மகேஷ், வரும்
கல்வியாண்டில் இருந்து நீதி போதனை வகுப்புகளை முதலில் நடத்திவிட்டே, பின் பாடங்கள் நடத்தப்படும். ஆசிரியர்களிடம் மாணவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்ள கூடாது. ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களின் சான்றிதழ்களில் ஒழுங்கீனமானவர் எனக் குறிப்பிடப்படும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ தொந்தரவு தந்தால், டிசியிலும், Conduct Certificate-லும் என்ன காரணத்துக்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டு, பள்ளியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்