தடுப்பூசி போட கட்டாயப்படுத்தக் கூடாது - உச்ச நீதிமன்றம் உத்தரவு
அட்மின் மீடியா
0
யாரையும் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி கட்டாயம் என பல்வேறு மாநில அரசுகள் விதித்த அரசாணைக்கு எதிரான வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அரசியல் சாசன பிரிவு 21ன் கீழ் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள கட்டாயப்படுத்திய முடியாது என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம், மேலும் தடுப்பூசி போடாதவர்களுக்கு பொது இடங்களில் அனுமதி மறுப்பு என்ற உத்தரவுகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
சில நிபந்தனைகளை உருவாக்கி அதன் கொள்கைகளை வகுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.
Tags: இந்திய செய்திகள்