Breaking News

கரூர் மாவட்டதிற்கு நாளை உள்ளூர் விடுமுறை..மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

அட்மின் மீடியா
0

கரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

 

 

கரூர் மாநகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் கோயில் திருவிழா முக்கிய நிகழ்வான கம்பம் ஆற்றுக்கு அனுப்புதல் நிகழ்வு நாளை ( 25ம் தேதி ) நடைபெற உள்ளது. இதனையொட்டி நாளை கரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுநாளை மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளதால், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை செயல்படாது. இந்த விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் விதமாக மாற்று வேலை நாள் விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback