Breaking News

பற்றி எரியும் இலங்கை அங்கு என்ன தான் நடக்குது முழு விவரம்

அட்மின் மீடியா
0

அண்டைநாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் உணவு பஞ்சம் தலைவிரித்தாட தொடங்கியது, வரலாறு காணாத விலைவாசி உயர்வு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் வெட்டு உள்ளிட்ட நெருக்கடிகளில் சிக்கிஉள்ளது.  இதற்க்கு முழு முதற்காரணம் ராஜபக்சே குடும்பமே என இலங்கை மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனை அடுத்து இந்தியா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு பண மற்றும் பொருளதவி கொடுத்து உதவியது,



மேலும் கடும் விலை வாசி உயர்வால் அங்கு குடும்பம் நடத்த முடியாமல் பலர் இந்தியாவிற்க்கு அகதிகளாக வந்தார்கள்

இதையடுத்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரும் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தீவிரமாக கடந்த ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று பிரதமர் ராஜபக்சேயின் அலுவலகம் எதிரே எதிர்ப்பு தெரிவித்து சிலர் போராட்டம் நடத்தினர். அவர்களை அரசு ஆதரவாளர்கள் தாக்கி விரட்டினர். இதனால் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் சிலர் காயமுற்றனர்.

போராட்டக்காரர்கள் மீது பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பல இடங்களில் போராட்டங்கள் தீவிரம்ராஜபக்சே ஆதரவாளர்கள் சென்ற பேருந்தை, பொதுமக்கள் அடித்து நொறுக்கியதால் பதற்றமான சூழல் நிலவுகின்றது

கொழும்பில் ஏற்பட்டுள்ள வன்முறையை அடுத்து இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் மக்கள் போராட்டத்தின் பலனாக இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

நாடு முழுவதும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வெடித்துள்ளது. அதனால், முக்கியப் பிரமுகர்கள் வெளிநாடுகள் தப்பிச் செல்லக்கூடும் என்று கருதி ஆர்ப்பாட்டக்காரர்கள் இரத்மலான விமான நிலையத்தைச் சுற்றிவளைத்துள்ளனர்.

ராஜபக்சேவின் ராஜினாமாவைத் தொடர்ந்து இலங்கையின் குருனகாலாவில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் அதிபரின் வீட்டை அடித்து நொறுக்கி, தீவைத்துக் கொளுத்தினர். தொடர்ந்து, பல அரசியல்வாதிகளின் வீடுகளையும் போராட்டக்காரர்கள் தீவைத்துக் கொளுத்தினர்இதுவரைக்கும் போராட்டக்காரர்கள்  சுமார் 30 அரசியல் வாதிகளின் வீடுகளை எரித்துள்ளார்கள் என கூறப்படுகின்றது

கொழும்புவில் உள்ள பிரதமருக்கான சொகுசு மாளிகையில் இருந்து மஹிந்த ராஜபக்சே வெளியேறியுள்ளார்.இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்து வரும் நிலையில் பிரதமர் மாளிகையில் இருந்து கடும் பாதுகாப்பாக வெளியேறி அதன்பின்னர் மஹிந்த ராஜபக்சே வேறு வீட்டில் குடியேறியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே,இலங்கையில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் பிரதமர் பதவியில் இருந்து விலகிய மஹிந்த ராஜபக்சே வெளிநாட்டுக்கு தப்பி செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback