Breaking News

ரேஷன் கடைகளில் அரிசி, சர்க்கரை பாக்கெட்டுகளில் வழங்கப்படும் -அமைச்சர் சக்கரபாணி

அட்மின் மீடியா
0

நியாய விலைக்கடைகளில் இனி அரசி, பருப்பு, சர்க்கரை போன்ற பொருட்கள் பாக்கெட்டுகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்திருக்கிறார்.


ரேஷன் கடைகள்உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 

பயோமெட்ரிக் முறையால் ரேஷன் கடைகளில் தவறுகள் நடப்பது குறைந்துள்ளதுமேலும் ரேசன் கடைகளில் முறைகேடுகள் நடந்தால், அதுகுறித்து 1967 என்ற எண்ணுக்கும், 1800 425 5901 என்ற எண்ணுக்கும் அழைத்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

அத்துடன் இனி நியாயவிலைக் கடைகளில் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களை பாக்கெட்டுகளில் வழங்கப்படும் எனவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பாக்கெட்டுகளில் வழங்கப்படும் என்றும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback