Breaking News

சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கியதில் 9 வயது சிறுவன் பலி

அட்மின் மீடியா
0

சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கியதில் 9 வயது சிறுவன் பலி


கிருஷ்ணகிரியை சேர்ந்த செந்தில் - பானுமதி தம்பதியினரின் மகன் கோபிநாத் (வயது 9) இவர்கள் தனது மகனுக்கு பள்ளி விடுமுறை நாள் என்பதால் தனது குடுப்பத்தோடு சொந்த ஊரான வேலூர் மாநகருக்குட்பட்ட சின்ன அல்லாபுரம் அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். நேற்று மாலை பானுமதி செல்போனுக்கு சார்ஜர் போட்டுள்ளார். அப்போது குளித்துவிட்டு வந்த கோபிநாத் ஈரக்கையுடன் செல்போனை சார்ஜரில் இருந்து கழற்றி உள்ளான்.அப்போது எதிர்பாராத விதமாக அவன் மீது மின்சாரம் பாய்ந்து அலறியபடி சம்பவ இடத்தில் மயங்கி சரிந்து விழுந்தான். 




கோபிநாத் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த பானுமதி மற்றும் குடும்பத்தினர் உடனடியாக அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

சார்ஜரில் இருந்து செல்போனை கழற்றியபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback