Breaking News

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலாவை ஓபிஎஸ் - ஈபிஎஸ் நீக்கியது செல்லும் - சென்னை உரிமையியல் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..

அட்மின் மீடியா
0

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு 2016 – ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் 2017- ஆம் ஆண்டு சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்த நிலையில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக தேர்வு செய்யப்பட்டப்பட்டார்.அதுமட்டுமில்லாமல் எடப்படி மற்றும் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி சசிகலா, டி.டி. தினகரனை கட்சியில் இருந்து நீக்கினர். இதனிடையே இந்த தீர்மானம் செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் சசிகலா வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் சென்னை உரிமையில் நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு வழங்கப்ட்டுள்லது அதில்.

சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய, அதிமுகவின் பொதுக்குழு தீர்மானம் செல்லும்...என சென்னை உரிமையியல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது

அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்து ள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback