Breaking News

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

அலங்காநல்லூரில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு


சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் விளையாட்டு துறை சார்பான பல்வேறு அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

தமிழ்நாட்டில் 4 மண்டலங்களில் தலா ஒரு ஒலிம்பிக் பயிற்சி அகாடமி அமைக்கப்படும் எனவும், அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தலா ₹3 கோடி செலவில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்

பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டை ஊக்கப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. சிலம்ப வீரர்களுக்கு விளையாட்டு துறைக்கான இட ஒதுக்கீட்டில் 3% வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார். 

மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் எனவும் விதி ஏன் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback