Breaking News

5 ஆண்டுகளுக்கு பின் அறங்காவலர் கட்டுப்பாட்டுக்குள் வந்த நாகூர் தர்கா... முழு விவரம்....

அட்மின் மீடியா
0

5 ஆண்டுகளுக்கு பின் அறங்காவலர் கட்டுப்பாட்டுக்குள் வந்த நாகூர் தர்கா... முழு விவரம்....


நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உலக புகழ்பெற்ற ஆண்டவர் தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவில் பரம்பரை அறங்காவலர்கள் 8 பேர் நிர்வகித்து வந்தார்கள்.



இந்த நிலையில் பரம்பரை அறங்காவலர்களில் ஒருவர் இறந்ததை அடுத்து, தர்காவை நிர்வாகம் செய்வதில் அறங்காவலர்களுக்குள் ஏற்பட்ட போட்டி மற்றும் முரண்பாடு காரணமாக, கடந்த 2017 ஆண்டு  நீதிமன்ற த்தரவுப்படி, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி அலாவுதீன், ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர் ஆகியோர் 4 மாதங்கள் மட்டுமே இடைக்கால நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டார்கள்

இந்நிலையில் 4 மாதங்கள் மட்டும் நியமிக்க அதிகாரிகள் கடந்த 4 ஆண்டுகளாக தர்கா நிர்வாகத்தை நடத்தி வந்துள்ளார்கள் நாகூர் தர்ஹா நிர்வாகத்தை 4 மாதங்களுக்கு மட்டும் கவனிக்க நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாகக்குழு 4 ஆண்டுகளாக பதவியில் தொடருவது ஏன் என்றும், அந்த நிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக்கூடாது எனவும் கேள்வி எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, நாகூர் தர்ஹா நிர்வாகத்தை வக்ஃபு வாரியம் கையி்ல் எடுக்க உத்தரவிட்டது சில மாதங்களாக வக்பு வாரியம் நிர்வகித்து வந்த நிலையில், பாரம்பரிய முறைப்படி அறங்காவலர்கள் நிர்வகிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. 

தொடர்ந்து பதினொரு அறங்காவலர்களை நீதிமன்றம் நியமித்த நிலையில் எட்டு பரம்பரை அறங்காவலர்களுக்கு ஓட்டுரிமை அளிக்கப்பட்டது. இதையடுத்து மூத்த அரங்காவலர் தேர்வு தர்கா அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அப்போது, நாகூர் தர்கா தலைமை அறங்காவலாராக, நாகூர் ஆண்டவரின் 10ம் தலைமுறையாக செய்யது காமில் சாஹிப் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு அறங்காவலர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். 5 ஆண்டுகளுக்குப்பிறகு, உலகப்புகழ்பெற்ற நாகூர் தர்கா பாரம்பரிய முறைப்படி அறங்காவலர்கள் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback