Breaking News

பஞ்சாபில் 300 யூனிட் மின்சாரம் இலவசம்! விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பஞ்சாபில் 300 யூனிட் மின்சாரம் இலவசம்!அனைத்து குடும்பங்களுக்கும் வருகிற ஜுலை 1ம் தேதி முதல், 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.- பஞ்சாப் மாநில அரசு அறிவிப்பு

 


பஞ்சாப்பில் சமீபத்திய சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. அக்கட்சி சார்பில் முதல்-மந்திரி வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த மார்ச் 16ந்தேதி முறைப்படி முதல்-மந்திரியாக பதவியேற்று கொண்டார்.

ஆம் ஆத்மிகட்சியின் ஒருங்கிணைப்பாளரான கெஜ்ரிவால் வாக்கு சேகரிக்க பஞ்சாப்புக்கு வந்தபோது, ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் இலவச மின்சார வினியோக திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தனது முதல் தேர்தல் வாக்குறுதி அளித்தார்

இந்நிலையில் கடந்த செவ்வாயன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை நேரில் சந்தித்த பகவந்த் மான், இலவசமாக 300 யூனிட் மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்து ஆலோசனை செய்ததாக ஆம் ஆத்மி கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பஞ்சாப் முதல்வராக பதவியேற்றிருக்கும் பகவந்த் மான், 300 யூனிட் இலவச மின்சாரம் என்ற அறிவிப்பை விரைவில் வெளியிட இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback