உச்சநீதிமன்றத்தில் ஹிஜாப் வழக்கு 2 நாளில் விசாரனைக்கு வரும் என தகவல்
பள்ளி, கல்லூரிக்கு கர்நாடக அரசு விதித்துள்ள ஆடை கட்டுப்பாட்டு மற்றும் உடுப்பியில் உள்ள அரசு கல்லூரியில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஆடை கட்டுப்பாடுகளுக்கு தடை விதிக்கக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டது.
மேலும் கல்லூரிமாணவிகள்,பெற்றோர்கள் என பலரும் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுக்கள் மீதான விசாரணை கர்நாடக ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், காஸி ஜெய்புனிஷா முகைதின் (பெண் நீதிபதி) முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
இன்று அந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது அதில்..
ஹிஜாப் இஸ்லாமிய சமுதாயத்தின் ஓர் அங்கமாக இல்லை. அரசின் சீருடை சட்டத்திற்கு அனைவரும் உட்பட்டவர்களே. எனவே ஹிஜாப் அணிவதற்கான தடை உத்தரவு தொடரும் என கர்நாடக ஐகோர்ட் அதிரடியாக தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில், ஹிஜாப் தடைக்கு எதிராக முதலில் மனு தாக்கல் செய்த மாணவிகள் உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்கள்
இந்த நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுக்களை விரைந்து விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு முன் மூத்த வழக்குரைஞர் மீனாக்ஷி அரோரா முறையிட்டார்.
இதனை பரிசீலித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி 2 நாட்களுக்குள் மேல்முறையீட்டு மனுக்கள் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்தார்
Tags: இந்திய செய்திகள்