Breaking News

உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்.... முழு விவரம்...

அட்மின் மீடியா
0

 உக்ரைன் ராணுவத்தில் இணைந்த தமிழக மாணவர்.. 


கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள சுப்பிரமணியம் பாளையத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் - ஜான்சி லட்சுமி தம்பதியருக்கு , சாய் நிகேஷ், சாய் ரோஷித் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

சாய்நிகேஷ் 12-ம் வகுப்பு முடித்து இந்திய ராணுவத்தில் சேர முயற்சித்தார் ஆனால் உயரம் குறைவு காரணமாக அவரால் ராணுவத்தில் சேர முடியவில்லை. 

அதன்பின்பு சாய் நிகேஷ் கடந்த 2019-ம் ஆண்டு உக்ரைன் நாட்டில் உள்ள கார்கிவ் நகரில் உள்ள நே‌ஷனல் ஏரோஸ்பேஸ் பல்கலைக்கழத்தில் சேர்ந்து அங்கு விடுதியில் தங்கி படித்து வந்தார். 

இந்த நிலையில் தற்போது உக்ரைன்- ரஷ்யா போர் ஏற்பட்டதை அடுத்து சாய் நிகேஷை தொடர்பு கொண்ட பெற்றோர், அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவிற்கு வருமாறு அழைத்தனர்.ஆனால் அவர் அதற்கு வர மறுப்பு தெரிவித்து இங்கு நான் உக்ரைன் ரானுவத்தில் பணியாற்றுவதாக கூறியுள்ளார் மேலும் உக்ரைனில் போர் ஏற்பட்டுள்ளதால் அந்த போரில் நானும் பங்கேற்று ரஷியாவுக்கு எதிராக போரிட்டு வருவதாக கூறியுள்ளளார். உடனடியாக அவர்கள் தங்கள் மகன் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்த விவரத்தை இந்திய வெளியுறவு துறைக்கு தெரிவித்து அவரை மீட்டு தருமாறு கோரிக்கை விடுத்தனர். அவர்கள் உளவுத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் உளவுத்துறையினர் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.

Tags: தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback