Breaking News

மீண்டும் ரயில்களில் போர்வை, கம்பளிகள்-ரயில்வே துறை அறிவிப்பு..!

அட்மின் மீடியா
0
கொரோனா காரணமாக ரயில்களின் ஏசி பெட்டிகளில் போர்வைகள் மற்றும் படுக்கைகள் நிறுத்தப்பட்டது.
 

இந்நிலையில், அனைத்து ரயில்வே மண்டலங்களின் பொது மேலாளர்களுக்கு ரயில்வே வாரியம் அளித்த உத்தரவில், ஏசி பெட்டிகளில் போர்வைகள் மற்றும் படுக்கைகள் வசதிகளை மீண்டும் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. 

பெருந்தொற்று பரவலை அடுத்து, கொவிட் விதிமுறைகள் செயல்பாட்டுக்கு வந்ததால் ரயில்களில் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இதனால் ரயில்களுக்குள்ளே கம்பளி போர்வைகள் மற்றும் திரைத்துணிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.இந்த கட்டுப்பாட்டை விலக்கிக் கொள்ள ரயில்வே தற்போது முடிவு செய்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது. பயணிகளுக்கு இவற்றை, கொவிட் தொற்றுக்கு முன்பு இருந்ததை போல வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback