Breaking News

மீண்டும் உயர்ந்த பெட்ரோல் டீசல் விலை! வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! இன்றைய விலை தெரியுமா

அட்மின் மீடியா
0

பொதுவாக,சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும்

ஆனால் கடந்த 137 வது நாளாக மாற்றமின்றி சென்னையில் நேற்று முந்தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்பட்டது.



இந்நிலையில்,137 நாட்களுக்கு பிறகு சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 76 காசுகள் அதிகரித்து ரூ.102.16-க்கும்,அதைப்போல், ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ.92.19-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

இந்நிலையில்,இரண்டாவது நாளாக இன்றும் பெட்ரோல்,டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அதன்படி,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 75 காசுகள் அதிகரித்து ரூ.102.91-க்கும்,

ஒரு லிட்டர் டீசல் விலையும் 76 காசுகள் அதிகரித்து ரூ.92.95-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது

2 நாட்களில் பெட்ரோல் ரூ.1.51, டீசல் ரூ.1.52 அதிகரித்துள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback