பேட்டரி பைக் சார்ஜ் செய்யும் போது வெடித்து தந்தை மகள் பலி .. முழு விவரம்..
வேலூர் மாவட்டம் சின்ன அல்லாபுரம் பகுதியில் நள்ளிரவில் எலக்ட்ரிக் பேட்டரி பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கியபோது பேட்டரி வெடித்து சிதறிய விபத்தில் தந்தை, மகள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் துரைவர்மா இரண்டு நாட்களுக்கு முன்பு புதியதாக எலெக்டிரிக்கல் பேட்டரியில் ஓடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை வாங்கியுள்ளார். அதனை இரண்டு நாட்களாக பயன்படுத்தி வந்துள்ளார்.
இவர் நேற்று இரவு தனது எலக்ட்ரிக் பேட்டரி பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிவிட்டார். இந்நிலையில், திடீரென எலக்ட்ரிக் பைக்கில் பொறுத்தப்பட்டிருந்த பேட்டரி பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் காரணமாக வீடு முழுவதும் புகைமூட்டமாக மாறியுள்ளது. அப்போது வீட்டில் இருந்த துணிகள் அனைத்தும் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இந்த தீயில் மாட்டிக்கொண்ட துரைவர்மாவும் அவரது மகள் மோகன பிரீத்தியும் வீட்டில் இருந்து வெளியே வருவதற்கு முயன்றுள்ளனர். ஆனால் தீ மளமளவென வீடு முழுவதும் தீப்பற்றியதால் கழிவறைக்குள் நுழைந்து தப்பிக்க முயன்ற இடத்திலேயே தீயினால் ஏற்பட்ட புகையில் சிக்கி தந்தை மற்றும் மகள் ஆகிய இருவரும் மூச்சுத்தினறி பலியானார்கள்.
இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். சம்பவ இடத்திற்க்கு வந்த வேலூர் தெற்கு காவல்துறையினர் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: தமிழக செய்திகள்