Breaking News

மாணவ மாணவிகளுக்கு பள்ளிகளில் மீண்டும் உடற்கல்வி பாடவேளை

அட்மின் மீடியா
0

அனைத்து பள்ளிகளிலும் உடற்கல்விக்கு பாடவேளை ஒதுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

 


கொரானா காரணமாகவே பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை கடந்த  2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது இந்நிலையில், பள்ளிகளில் மீண்டும் உடற்கல்வி பாடவேளை அமலுக்கு வருவதாக பள்ளிக்கல்வி துறை ஆணையர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், அனைத்து பள்ளிகளிலும் 6-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை மட்டும் உடற்கல்வி பாடவேளையை அமல்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 10, 11 & 12-ம் வகுப்பினர் பொதுத்தேர்வுக்கு தயாராவதால், அவர்களுக்கு உடற்கல்வி பாடவேளை கிடையாது என கூறியுள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback