Breaking News

நான் எங்கும் ஓடி ஒளியவில்லை...மக்களுடன் தான் உள்ளேன்...உக்ரைன் அதிபர் வெளியிட்ட வீடியோ...

அட்மின் மீடியா
0

இரண்டு வாரங்களாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா இன்னும் தனது தாக்குதலை கைவிடவில்லை,ரஷ்யாவின் முப்படைகளும் தொடர்து தககுதல் நடத்திவரும் நிலையில் உக்ரைன் அதிபர் மக்களைவிட்டு விட்டு எங்கு சென்றார் என தெரியவில்லை என வதந்தி பரவியது இந்நிலையில் தனது டிவிட்டரில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார் 

வீடியோவில் அவர்:-

நான் தலைநகர் கிவ் பாங்கோவா தெருவில்தான் தங்கி இருக்கிறேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. நான் யாருக்கும் பயப்படமாட்டேன். நாங்கள் நாட்டில் தான் உள்ளோம், ராணுவம் எங்களுடன் உள்ளது. எங்கும் தப்பி செல்லவில்லை. நான் பின்வாங்க மாட்டேன்.இது எனது நகரம். ஒவ்வோரு உக்ரைன் குடிமகனும் ரஷியாவுக்கு எதிராக போராடி வருகின்றனர்.எங்களின் இந்த போரில் வெற்றி பெறுவதற்கு என்ன தேவையோ அதை செய்வோம். 

ரஷிய வீரர்கள் துப்பாக்கிச் சூட்டை தைரியமாக எதிர்கொண்டு வருகிறோம், போரில் வெற்றி பெறும்வரை உக்ரைனைவிட்டு வெளியேற மாட்டேன்.யாரைக் கண்டும் எனக்கு அச்சம் இல்லை. உக்ரைன் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் மீண்டும் கூறுகிறேன். நாங்கள் தொடர்ந்து போராட்ட குணத்தை வெளிப்படுத்தி வருகிறோம். நாங்கள் அனைவரும் களத்தில் இருக்கிறோம். என்னுடன் எனது குழுவும் உள்ளது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback