Breaking News

பாகிஸ்தானில் உள்ள பள்ளி வாசலில் ஜும்மா தொழுகையின் போது தற்கொலைப் படை தாக்குதல் - 58 பேர் பலி

அட்மின் மீடியா
0

பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியிலுள்ள பள்ளிவாசலில் ஜும்மா தொழுகை நடைபெற்று கொண்டிருந்த போது நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் 58 பேர் உயிரிழந்த நிலையில், 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.



பாகிஸ்தானின் வடமேற்கு திசையில் உள்ள நகரமான பெஷாவரை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் வெள்ளிக்கிழமையையொட்டி அங்குள்ள பள்ளி வாசலில் வழக்கமான தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் தான் கொண்டு வந்த கைத்துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சுட்டதாகவும், சிறிது நேரத்தில் தனது உடலில் மாட்டிக்கொண்டிருந்த வெடிகுண்டை வெடிக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 50 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள பலர் இக்கட்டான சூழலில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை

மேலும் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது


https://twitter.com/Jatinsharma5891/status/1499710912747302914

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback