மார்ச் 28,29 தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தம்!! தொழிற்சங்கங்கள் அதிரடி அறிவிப்பு!!
இந்தியா முழுவதும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
மார்ச் 28, 29ம் தேதிகளில் மத்திய அரசு ஊழியர்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அரசு ஊழியர்கள் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை கைவிடுவது உட்பட மத்திய அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
நாடு தழுவிய இந்த வேலை நிறுத்தத்துக்கு தி.மு.க., இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மார்ச் 28,29 ஆம் தேதி பணிக்கு வராத தமிழக அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை என தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு அறிவித்துள்ளார். அத்துடன் பணிக்கு வந்தோர், வராதவர்கள் பட்டியல் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என அரசு அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்