Breaking News

மார்ச் 18 ம் தேதி இந்த மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் மார்ச் 18-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு வருகிற மார்ச் 18ம் தேதி நெல்லை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

பங்குனி மாத பௌர்ணமியும், உத்திராட நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திர விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த வுருடம் வருகிற மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை ( பங்குனி 4-ம் தேதி ) பங்குனி உத்திர திருவிழா வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் மற்றும் காந்திமதி அம்மாள் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து முக்கிய நிகழ்வான தேர் திருவிழா மார்ச் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு மார்ச் 18 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அன்றைய தினம் அரசு பொதுத்தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், அந்த பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும்

அதேசமயம் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 26 கடைசி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளதுஎன்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback