மார்ச் 15 இந்த மாவட்டத்திற்க்கு உள்ளூர் விடுமுறை.... முழு விவரம்...
அட்மின் மீடியா
0
திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு மார்ச் 15 ஆம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.அந்த வகையில், தியாகராஜர் கோயில் பங்குனி உத்திரத் திருவிழா இந்த ஆண்டு கடந்த மாதம் 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவின் சிறப்பு நிகழ்வான ஆழித்தேரோட்டம் வருகின்ற மார்ச் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்த நிலையில்,அன்றைய தினத்தில் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Tags: தமிழக செய்திகள்