Breaking News

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம் apply now

அட்மின் மீடியா
0

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது



பட்டப் படிப்புடன் பி.எட்., முடிக்கும் பட்டதாரிகள், அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற, தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதிக்கான, டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில், ஒரு முறை தேர்ச்சி பெற்றால், அது வாழ்நாள் முழுதும் செல்லத்தக்க சான்றிதழாக வழங்கப்படுகிறது.த

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் அது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது 

இதன்படி, நாளை முதல் ஏப்ரல் 13-ம் தேதி மாலை 5:00 மணி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். 

மேலும் விவரங்களுக்கு:-

http://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback