Breaking News

மெட்ரோ ரயிலில் போங்க, 1 லட்சம் பரிசு WIN பண்ணுங்க முழு விவரம்....

அட்மின் மீடியா
0
சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளை ஊக்கு விக்கும் வகையில் 1 லட்சம் வரையிலான பரிசு பொருட்கள் அல்லது பரிசு கூப்பன் வழங்கப்படும் என மெட்ரோ அறிவித்துள்ளது.



அதன் படி ஒரு மாதத்தில் அதிகப்பட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளிக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் உள்ள பரிசு பொருட்கள் அல்லது பரிசு கூப்பன் வழங்கப்படும் என்றும் இது தவிர மேலும் 30 நாட்களுக்கு விருப்பம் போல் பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாதம் தோறும் பரிவர்த்தனை ரூ. 1500 மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளை தேர்ந்து எடுத்து மாதாந்திர அதிஷ்ட குலுக்கல் நடத்தப்பட்டு தலா ரூ. 2,000 மதிப்புள்ள கூப்பன் அல்லது பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து பயண அட்டை வாங்கிய 10 பயணிகளைத் தேர்ந்தெடுத்து, மாதாந்திர குலுக்கல் நடத்தப்படும் என்றும் இதில் ரூ.500- க்கு டாப் அப் செய்திருந்தால் ரூ. 1,450 இலவச டாப் அப் மற்றும் ரூ. 2000 -க்கு கூப்பன் அல்லது பொருட்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்கள் அனைத்தும் வரும் 21.தேதி முதல் அமலுக்கு வரும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிலையம் அறிவித்து இருக்கிறது


இதுகுறித்து செய்தி குறிப்பில்

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மெட்ரோ இரயில் சேவையை 54.41 கி.மீ தூரத்திற்கு நீல வழித்தடத்தில் விமான நிலையம் மெட்ரோ முதல் விம்கோ நகர் பணிமனை மெட்ரோ இரயில் நிலையம் வரை மற்றும் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ முதல் பரங்கிமலை மெட்ரோ நிலையம் வரை தங்குதடையின்றி முழுமையாக மெட்ரோ பயணிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது இதுவரை சுமார் 10.50 கோடி பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

இதுவரை மெட்ரோ இரயில் சேவைகளைப் பயன்படுத்தி, சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு ஆதரவளித்து வரும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், பின்வரும் அற்புதமான திட்டங்களை அறிவிப்பதில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மகிழ்ச்சி அடைகிறது இந்த திட்டங்கள், 21:03.2022 முதல் அமலுக்கு வரும்.

1. ஒரு மாதத்தில் அதிகபட்சமாக பயணம் செய்யும் முதல் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000/- மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும் இதுதவிர மேலும் 30 நாட்களுக்கான விருப்பம்போல் பயணம் செய்வதற்கான பயண அட்டை (ரூ.2,500/- மற்றும் ரூ.50/- வைப்புத்தொகை மதிப்புள்ள) வழங்கப்படும்.

2. மாதம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.1500/- மற்றும் அதற்கு மேல் பணம் செலுத்திய 10 பயணிகளைத் தேர்ந்தெடுத்து மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தப்படும். அதில் 10 பயணிகளுக்கு தலா ரூ.2,000- மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

3. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை வாங்கிய 10 பயணிகளைத் தேர்ந்தெடுத்து மாதாந்திர அதிர்ஷ்டக் குலுக்கல் நடத்தப்படும். மேலும் இதில் குறைந்தபட்சத் தொகையான ரூ.500/-க்கு டாப் அப் செய்திருந்தால் ரூ.1.450/- மதிப்புள்ள இலவச டாப் அப் மற்றும் ரூ.2,000/ மதிப்புள்ள பரிசு கூப்பன் அல்லது பொருள் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட திட்டங்கள் பயணிகளை ஊக்குவிக்கவும் பயனளிக்கவும் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிகள் தங்களது பயணத்தை தொடர்ந்து பயணிக்க வேண்டும்.என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது


Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback