Breaking News

FACT CHECK பாடகி லதா மங்கேஷ்கரின் கடைசி வார்த்தைகள் என ஷேர் செய்யப்படும் பதிவு உண்மையா? முழு விவரம்...

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும் ஒவ்வொருவரும் அறியவேண்டிய வாழ்க்கை பாடம் 

லதா மங்கேஷ்கர் கடைசியாக பேசிய வார்த்தைகள். 

மரணத்தை விட உண்மையானது இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. இந்த உலகத்தில் விலை உயர்ந்த பிராண்டட் கார் என்னுடைய கேரேஜில் நிற்கிறது. ஆனால் நான் சக்கரநாற்காலியில் அழைத்து செல்லப் படுகிறேன். 

இந்த உலகத்தில் உள்ள அனைத்து வகையான டிசைன்களிலும் கலர்களிலும் விலை உயர்ந்த ஆடைகள், விலை உயர்ந்த காலணிகள், விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் என் வீட்டில் உள்ளது. ஆனால் நான் மருத்துவமனை வழங்கிய சிறிய கவுனில் இருக்கிறேன்.

என் வங்கி கணக்கில் ஏராளமான பணம் கிடக்கிறது ஆனால் எதுவும் எனக்குப் பயன் இல்லையே. என் வீடு அரண்மனை போன்று, கோட்டை போன்று உள்ளது. ஆனால் நான் மருத்துவமனையில் ஒரு சிறு படுக்கையில் கிடக்கிறேன். 

இந்த உலகத்தில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு நான் பயணித்துக் கொண்டே இருந்தேன்.ஆனால் மருத்துவமனையில் உள்ள ஆய்வகங்களுக்கு மற்றொரு லேபுக்கும் மாற்றி மாற்றி அழைத்துச் செல்லப்படுகிறேன். 

அன்று தினசரி 7 சிகை அலங்கார நிபுணர்கள் எனக்கு அலங்காரம் செய்வார்கள். ஆனால் இன்று என் தலையில் முடியே இல்லை.

உலகிலுள்ள பல வகையான உயர் நட்சத்திர ஓட்டல்கள் உணவுகளை உண்டு கொண்டிருந்தேன். ஆனால் இன்று பகலில் இரண்டு மாத்திரைகள் இரவில் ஒரு துளி உப்பு.

தனியார் ஜெட்டில் உலகம் முழுவதும் பறந்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று மருத்துவமனை வராந்தா விற்கு வருவதற்கு இரண்டு_நபர்கள் உதவுகிறார்கள். 

எல்லா வசதி வாய்ப்புகளும் எனக்கு உதவவில்லை. எந்த விதத்திலும் ஆறுதல் தரவில்லை. ஆனால், சில அன்பானவர்களின் முகங்களும் அவர்களது தொழுதல்களும் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது.

இவ்வளவு தாங்க வாழ்க்கை…யாருக்கும் உதவாத…வெறும் பணம் பதவி அதிகாரம் என்று இருக்கும் மனிதர்களை மதிப்பதை தவிருங்கள்….நல்ல மனித நேயமுள்ள மனிதர்களை நேசியுங்கள்.” என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள்

 

 

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்dஉ ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் கடந்த 6 ஆம் தேதியன்று காலமானார். இந்நிலையில் அவர் இறுதியாக பேசியதாக மேலே உள்ள பதிவை பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றார்கள்.

ஆனால் பலரும் ஷேர் செய்யும் அந்த பதிவில் உள்ள வார்த்தைகள் லதா மங்கேஷ்கர் சொன்னது கிடையாது அந்த வார்த்தைகள் சென்னது கடந்த 2018 ம் ஆண்டு கேன்சரால் இறந்து போன பிரபல பேஷன் டிசைனர் Kyrzayda Rodriguez-ன் வார்த்தைகள் ஆகும். அவர் சொன்ன போது எடுக்க பட்ட வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது 


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

அட்மின் மீடியாவின் ஆதாரம்

https://www.facebook.com/watch/?ref=external&v=1161336954016462

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback