இந்திய ரயில்வேயின் ஆப்பில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வது எப்படி!!! முழு விவரம்.....
இருக்கை காலியாக உள்ளதை சரிபார்க்கலாம்.
ரயில் அட்டவணைகளை தெரிந்து கொள்ளலாம்.
ஆஃப்லைன் மூலமும் பார்க்க முடியும்.
முன் பதிவு செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்யவும் முடியும்.
தட்கல் முறையில் இருக்கைகள் முபதிவு செய்யலாம்
இந்த செயலியை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முன்பதிவை உறுதிசெய்யும் முன் தங்கள் பயண விவரங்களைச் சேமிக்கலாம்.
ஏசி வகுப்புகளுக்கான தட்கல் டிக்கெட் முன்பதிவு காலை 10 மணிக்கு தொடங்குகிறது, அதே நேரத்தில் ஏசி அல்லாத வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கு தொடங்குகிறது
முன்பதிவு செய்ய,
தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு குறைந்தது 15 நிமிடங்களுக்கு முன், உங்கள் ஐஆர்சிடிசி கணக்கில் உள்நுழைய வேண்டும்.
ரயிலில் ஏறும் இடம், சேரும் இடம் மற்றும் பயணத் தேதியைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ‘சமர்ப்பி’ பொத்தானை அழுத்தவும்.
அடுத்து, ஒதுக்கீடு வகையாக ‘தட்கல்’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
சரியான ரயிலைத் தேர்ந்தெடுத்து ‘இப்போதே புக் செய்யவும்’ என்பதைக் கிளிக் செய்யவும்.
பெயர், வயது, பாலினம், விருப்பமான இருக்கை மற்றும் தொலைபேசி எண் போன்ற அத்தியாவசிய தகவல்களை நிரப்பவும்.கேப்ட்சா குறியீட்டை பெட்டியில் உள்ளிடவும்.
இணைக்கப்பட்ட வங்கிகள் மூலம் பணம் செலுத்தலாம்.
ஒரு பயனர் ஐஆர்சிடிசி இ-வாலட்டுடன் ஆறு வங்கிகள் வரை இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய ரயில்வேயின் ஆப் டவுன்லோடு செய்ய:-
https://play.google.com/store/apps/details?id=cris.org.in.prs.ima&hl=en_IN&gl=US
Tags: முக்கிய செய்தி