Breaking News

மக்களே உங்களுக்குத்தான் - ப்ளே ஸ்டோர் ஆப் மூலம் லோன் வாங்க வேண்டாம் என காவல்துறை எச்சரிக்கை!

அட்மின் மீடியா
0

அவசர தேவைக்காக கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள கடன் செயலிகள் மூலம் லோன் பெற வேண்டாம் என சென்னை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது




இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

சென்னை பெருநகர காவல்துறை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் மற்றும் கந்துவட்டி தடுப்பு பிரிவு போலீசார் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் லோன் ஆப் செயலிகள் மூலம் மக்களுக்கு அதிக வட்டிக்கு பணம் கொடுத்து, பின் தொந்தரவு செய்யும் மோசடி கும்பலை கைது செய்து சிறையிலடைத்தனர்.

மேலும், லோன் செயலிகளை கண்டறிந்து அதனை பிளே ஸ்டோரில் இருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டன. இத்தகைய தீவிர தடுப்பு நடவடிக்கைகளால் குறைந்திருந்த லோன் செயலிகள் தற்போது மீண்டும் பிளே ஸ்டோர் மற்றும் வெப்சைட்டுகளில் பரவலாக அதிகரித்து வருகிறது.

லோன் செயலிகளின் மூலம் கடன் வாங்கும் போது. கடன் பெறுபவருடைய செல்போனில் இருக்கும், தொடர்பு எண்கள், போட்டோ, தனிப்பட்ட விவரங்களை அந்த செயலிகள் சேகரித்து வைத்துக்கொள்ளும். கடன் வாங்கும் தொகையில் ஏறக்குறைய 30 சதவீதம் பணத்தை பிராசஸிங் பீஸ் ஆக பிடித்துக்கொண்டு மீதமுள்ள பணம் லோன் வாங்குபவரின் வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும்.இந்த பணத்தை திருப்பி கட்டுவதற்கு 7 நாட்கள் வரை அவகாசம் வழங்கப்படும். 

உதாரணதிற்கு ரூ5.,000 லோன் அப்ளை செய்யும் பட்சத்தில் ரூ.3500 மட்டுமே லோன் பெறுபவருக்கு கிடைக்கும். ரூ.1500 பிராசஸிங் பீஸாக எடுத்துக்கொள்ளப்படும். 7 நாட்களுக்குள் திருப்பி செலுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.200/- முதல் ரூ.500/- வரை வட்டி ஏறிக் கொண்டே செல்லும். பத்து நாட்கள் வரை பணம் திருப்பி செலுத்தாதவர்களுக்கு போன் மூலம் மிரட்டல்கள் வர துவங்கும். 

மேலும் லோன் பெறுவோரின் நண்பர்கள், உறவினர்களின் செல்போனுக்கு கடன் பெற்ற நபர் குறித்து தவறாகவும், ஆபாசமாகவும் குறுஞ்செய்திகளை மோசடி கும்பல் அனுப்புகிறது.இதனால் இவ்வாறு லோன் செயலிகள் மூலம் கடன் பெறுவோர், வேலையிடங்களிலும், உறவினர்களிடத்திலும் பல்வேறு அவமானங்களுக்கு உள்ளாவதுடன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெரிய அளவிலான பண இழப்பும் ஏற்படுகிறது, 

எனவே பொதுமக்கள் அவசர தேவைக்காகவோ அல்லது வேறு ஏதும் காரணங்களுக்காகவோ இத்தகைய லோன் செயலிகளில் கடன் பெற வேண்டாம் என்று சென்னை பெருநகரகாவல் ஆணையர் சங்கர் ஜிவால் கேட்டுக்கொண்டுள்ளார்.






Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback