17ம் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரங்களுக்கு அனுமதி இல்லை - தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்
அட்மின் மீடியா
0
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும்19-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தல் ஆணையம் தற்போது தேர்தல் பரப்புரை குறித்து அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவார்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பிய அறிக்கையில், தேர்தல் நடத்தை விதிகளின்படி அரசியல் கட்சிகளின் தேர்தல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் வாக்குப்பதிவு முடிவுறும் நேரத்திலிருந்து 48மணி நேரத்திற்கு முன்பாக கண்டிப்பாக நிறுத்தப்பட வேண்டும். அதன்படி, தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் மற்றும் ஏனைய பிரச்சாரங்கள் அனைத்தையும் 17.02.2022 (வியாழக்கிழமை) அன்று மாலை 6.00 மணிக்கு மேல் மேற்கொள்ளக்கூடாது என்பதை அரசியல் கட்சியினர், வேட்பாளர் கடைபிடிப்பதை உறுதி செய்ய அனைத்து மாவட்ட தேர்தல் அலுவார்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags: தமிழக செய்திகள்