தோட்டத்தில் பூக்கள் பூக்காதது குத்தமா???? 6 மாதம் ஜெயிலுக்கு அனுப்பிய அதிபர்.....
கிம் ஜாங் உன், தமது தந்தை மற்றும் தாத்தாவின் பிறந்தநாளை, ஆண்டு தோறும் மிக விமரிசையாக கொண்டாடுவார். 1988ல் வடகொரியாவின் முன்னாள் ஜனாதிபதியின் பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில் இதற்காக ஜப்பானிய தோட்டக்கலை நிபுணர் ஒருவரால் கலப்பின முறையில் புதிதாக உருவாக்கப்பட்ட பூ தான் கிம்ஜோங்கிலியாஸ். இந்த சிறப்பு பூக்களை தமது தோட்டத்தில் பூக்க வைத்து, பிறந்த நாள்மேடையில் அலங்காரத்திற்கு பயன்படுத்தி வந்துள்ளார்.தந்தையின் பிறந்தநாளை முன்னிட்டு அவ்வகை மலர்களை அரசு தோட்டத்தில் இன்று அதிகம் மலரச்செய்ய வேண்டும் என அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இந்த ஆண்டு தனது தந்தையின் பிறந்தநாளுக்கான பூக்கள், பூக்கவில்லை என கடும் கோபம் அடைந்துள்ள கிம் ஜாங் உன் 50 வயதான ஹான் என்பவரே தோட்ட மேற்பார்வையாளராக பணியாற்றி வந்த அவருக்கு 6 மாதங்கள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பரில் கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங்-இல் நினைவு நாளை முன்னிட்டு 11 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டதையொட்டி மக்கள் சிரிக்கவோ, மது அருந்தவோ, கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கவோ தடை விதிக்கப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கும்.
Tags: வெளிநாட்டு செய்திகள்