Breaking News

ஹிஜாப் தடையை கண்டிக்கின்றோம்....57 முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பு கடும் கண்டனம்....

அட்மின் மீடியா
0

இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அதிகரித்து வருவதாக, 57 நாடுகள் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் பொது செயலாளர் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் தெரிவித்திருக்கும் கருத்தில், “இந்தியாவில் இஸ்லாமிய மக்கள் மற்றும் அவர்களின் வழிபாட்டு தளங்கள் மீதான தொடர்ச்சியான தாக்குதல், இஸ்லாமியர்களுக்கு எதிரான சட்டங்கள், அற்ப காரணங்களுக்காக இஸ்லாமியர்கள்மீதான தாக்குதல்கள் ஆகியன, இஸ்லாமியஃபோபியா அதிகரிப்பதை குறிக்கிறது” என தெரிவித்துள்ளார்.


மேலும், “சர்வதேச சமூகம் குறிப்பாக ஐநா மற்றும் மனித உரிமைகள் கவுன்சில் இதில் தலையிட்டுத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவில் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதோடு, வன்முறை மற்றும் வெறுப்பு செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” என கூறியுள்ளார்.


https://twitter.com/OIC_OCI/status/1493191463374626821



Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback