Breaking News

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வரும் 19-ம் தேதி பொது விடுமுறை- தமிழக அரசு

அட்மின் மீடியா
0
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வருகின்ற 19ஆம் தேதி பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறவுள்ள பிப்ரவரி 19ம் தேதி பொது விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் பிப்ரவரி 19 ஆம் தேதி பொதுவிடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொது விடுமுறை தொடர்பான அறிவிக்கை தமிழ்நாடு அரசு சிறப்பிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback