ஞாயிறு முழு ஊரடங்கு நாளன்று போட்டி, நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் பயணம் மேற்கொள்ள தமிழக அரசு அனுமதி
அட்மின் மீடியா
0
ஞாயிறு முழு ஊரடங்கு நாளன்று போட்டி, நேர்முகத்தேர்வுக்கு செல்வோர் பயணம் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
முழு ஊரடங்கு நாளான ஞாயிறுக்கிழமையன்று யூ.பி.எஸ்.சி, டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள், நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கான நேர்முக தேர்வில் பற்கேற்க செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்க செல்வோர் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு அல்லது நிறுவனத்தின் அழைப்பு கடிதத்தை காண்பித்து பயணங்களை மேற்கொள்ளலாம். தேர்வு எழுத செல்வோருக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: தமிழக செய்திகள்